Monday, March 9, 2020

மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரைக் கல்லூரி

உலக மகளிர்தினத்தை முன்னிட்டு களம் அமைப்பு சார்பாக மகளிர் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு மதுரைக்கல்லூரியில் மாணவிகளுக்கான  மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவர் ரேவதி ஜானகிராம்., MD., DGO மாதவிடாய் கோளாறுகள் பற்றிய மருத்துவ உரையை வழங்கினார். 

மருத்துவர் அமுதன்., MD உயர் ரத்த அழுத்தம் குறித்த மருத்துவ உரையை வழங்கினார். அடுத்து, திருமதி கண்ணம்மாள் இயற்கை பருத்தி  நேப்கின் குறித்த விழிப்புணர்வை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் திருமதி ராதா, திருமதி மகாலட்சுமி மற்றும் மதுரைக் கல்லூரி தேசிய சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமதி மலர்விழி, திருமதி மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயனுற்றனர்.







No comments:

Post a Comment